கம்பு அரிசி இரண்டையும் சேர்த்து ஊரவைத்து கிரைண்டரில் நைசாக அரைக்கவும். அதன்பிறகு உளுந்தை நன்குஅரைத்து, அரைத்தமாவுடன் சேர்த்து தேவையான உப்பு கரைத்து வைக்கவும். மறுநாள் காலையில் தோசை சுட்டால் மிகருசியாக இருக்கும்.
சிவப்பு மிளகாய் சிறியவெங்காயம் தக்காளி எல்லாவற்றையும் எண்ணை சேர்த்து வதக்கவும். பிறகு வெள்ளைபூண்டு சேர்த்து அரைக்கவும். கம்பு மாவு தோசைக்கு தொட்டு சாப்பிடவும்.