குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்குவது என்பது இன்றைய இளம் தாய்க்கு அவ்வளவு சுலபமான காரியமல்ல! சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் கிரஷ்கள் என்று அழைக்கப்படுகின்ற தனியார் குழந்தைகள் காப்பகங்கள் அதிகரித்து வருவதே இதற்கு சாட்சி.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் இன்றைய குழந்தைக் நாளைய தலைவர்கள் என்றெல்லாம் சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம்; நடைமுறையில் ஓர் இளம்தாய் தன்னுடைய குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு படும் பாடு இருக்கிறதே, அதை எழுத்தில் வடிக்க இயலாது.