'' பெண்ணெனும் ஊடகம்'' என்னும் இந்நூலில் நவீன இலக்கியம் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் முனைவர் அ. குணசேகரன் அவர்கள் பல நூல்களில் தனது நுண்மாண் நுழைபுலப் புலமையைச் செலுத்தி ஆழ்ந்து, ஆய்ந்து இந்நூலைப் படைத்துத் தந்துள்ளார். பல நூல்களைச் சான்றுகாட்டி பெண்களின் அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
வணிகத் தளங்களிலும் தொழிலகங்களிலும் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஆட்சியாளர்களும் மகளிர் அமைப்புகளும அக்கறையோடு செயல்பட்டால் பெண்களின் உழைப்பு உரிய மதிப்பைப் பெறும். குடும்பத்திலும் வேலைத் தளத்திலும் சாதியின் நிமித்தமாகத் தலித் பெண்கள் பெறும் அவலநிலைகள் பல சிறுகதைகள் மற்றும் நாவல்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.