சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை சிறைவாசம் அனுபவித்தவர் அமரர் கல்கி. இலங்கைக்கு மூன்று தடவை சென்று வந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதை எவ்வளவு முக்கியமானதாகக் கருதி மகிழ்ச்சியும் மனத் திருப்தியும் அடைந்தாரோ, அதை அளவுக்கு இலங்கை சென்று திரும்புவதையும் முக்கியமானதாகக் கருதி அளப்பரிய மகிழ்ச்சியும் மனத்திருப்தியும் அடைந்தார். சிறைவாச அனுபவங்கள் விகடனிலும் கல்கியிலும் தொடர் கட்டுரைகளாயின. இலங்கைப் பிரியாண அனுபவங்களும் விகடன்- கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.