ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது எழுத்துகள் மூலம் தமிழ் வாழ்வில்
ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தியவர் சுந்தர ராமசாமி.
தமது இறுதிக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், புதிய
பார்வை, காலச்சுவடு, இந்தியா டுடே, காலம் ஆகிய இதழ்களில் எழுதிய
கட்டுரைகள், சிறுகதைகள், உரைகள், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை,
நாட்குறிப்புகள், எழுதத் திட்டமிட்டிருந்த அடுத்த படைப்புப் பற்றிய
குறிப்புகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது.