இந்தக் கதைகளின் களம்- ஈழம், தாய்லாந்து, விண்வெளி. காலம் - நேற்று, இன்று, நாளையையும் கடந்த முடிவற்ற காலம். இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக்காகவும் போரடுகிறார்கள். அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கிறது. இந்த மானுடச் சிக்கலை முன்வைப்பவை இந்த கதைகள்.
சு.ரா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற நட்டுமை யின் ஆசிரியர் நெளஸாத்தின் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இந்நூல்.