நடைமுறை வாழ்க்கையின் அடித்தளமான உறவுமுறைகளில் வேரூன்றிக்கொண்டு, அதன் எல்லைச் சுவர்களில் மூடிக்கிடக்கும் சாளரங்களைத் திறக்க விழைகின்றன க.வை. பழனிசாமியின் கவிதைகள். தினசரி உலகத்தின் எல்லைகளுக்கு வெளியே பாய்ந்து உலவும் ஒளி வீச்சுகளைக் கைப்பற்றித் தரும் ஜாலத்தை எளிமையான வழிகளில் செய்துகாட்டுகின்றன அவை.