காளிதாசர் பாரத நாட்டுக் கவிஞர்களுள் தலை சிறந்தவர். ஸம்ஸ்கிருத மொழிக்கு வளம் சேர்ந்தவர். அவரது நூல்கள் பாரத நாடு முழுவதிலும் அல்லாது, உலக முழுவதிலும் புகழ் பெற்றுத் திகழ்கின்றன. மேனாட்டு அறிஞர்கள் பலர் அவரது கவித்திறத்தைப் பாராட்டியுள்ளனர். உலக இலக்கிய வரலாற்றில் காளிதாசர் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறார். அவர் இயற்றிய காவியங்கள்: 1. இரகு வம்சம் (செய்யுள் காவியம்) 2. குமார சம்பவம் (செய்யுள் காவியம்) 3. மேக சந்தேசம் (செய்யுள் காவியம்), 4. (இ)ருது சம்காரம் (செய்யுள் காவியம்), 5. மாளவிகாக்னிமித்திரம் (நாடகம்) 6. விக்ரம ஊர்வசியம் (நாடகம்) 7. சாகுந்தலம் (நாடகம்)