நாளை பற்றிய கனவில் இன்று வாழ்கிறோம். இன்றைய நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்கிறோம். இந்த நம்பிக்கையையும் கனவையும் தொடர்ச்சியாகக் கொண்டது தான் வாழ்க்கை, இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் திருத்திக்கொள்ள முயலாமலும் சரியான வழிமுறைகள் தெரியாமலும் திகைத்து நிற்பவர்கள பலர். அவர்களுடைய தொலைந்து போன மகிழ்ச்சியை மீட்டுத் தருவதே இந்நூலின் நோக்கம்..