ஒரு நோயை அகற்றும் போராட்டத்தில் மற்றவர்கள் யாராவது அவதிப்படுபவருக்காக போராட முடியாது. இது தனிப்பட்ட ஒருவருடைய போராட்டம். அவதிப்படுபவர் தனித்து நின்று நம்பிக்கையுடன் போராடி வெற்றி காண வேண்டும். ஒருவர் காணும் வெற்றியின் அளவு அவருடைய முயற்சி, நம்பிக்கை ஆகியவற்றின் அளவுகளைப் பொறுத்தே அமையும். தாழ்வு மனபான்மையால் அவதிப்படுபவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கட்டாயம் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன்.