ரிஷிகளின்
படைப்பான ஜோதிட சாஸ்திரத்தை விளக்கும் ஆதி நூல்கள் பல. ஆயினும் பலன்களை
அறியும் மறை மூலநூல்களில் கூட மாறுபட்டுள்ளது போல் தெரிகின்றது.
அதுவுமல்லாமல் ஜோதிடர்களும் குறிப்பிட்ட முறையில்தான் பலன் கூற வேண்டும்
என்ற திட்டவட்டமான வரைமுறை இல்லாதபடி, தங்களுக்கு தோன்றிய படி பலன்கள்
கூறுவதால் பல கணிப்புகள் சரியாக அமையாமல் தவறிவிடுகின்றது.
ஆனால் ஜோதிடக் கலையில் ஓர் அங்கமான ஆரூடக் கலையைச் சேர்ந்த “சோழிப்
பிரச்னம்” மேற்கண்ட தவறு களை பெரும்பாலும் களைந்து, பலன்கள் கேட்பவர்
குழப்பம் இல்லாமல் பலன்களை அறிய உதவுகிறது.