விஞ்ஞானம் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிற காலம் இது. இந்த வேளையில், விஞ்ஞானத்தைப் பற்றிய அடிப்படை விஷயங்களை நாமெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம். நாமெல்லாம் யார், நாம் எப்படி உருவானோம் நம்மை வழி நடத்துவது எவை. சுற்றும் பூமிக்கும் சுட்டெரிக்கும் சூரியனுக்கும் அடிப்படை எது. நம்முடைய பூமியும், இந்த பிரபஞ்சமும் எப்போது செயலிழந்து போகும். நமக்குள் இருக்கும் உயிருக்கும் இயற்கை சக்திகளுக்கும் ஆதாரம் எங்கே ஒளிந்திருக்கிறது . கம்ப்யூட்டர் அறிவு மனித அறிவை மிஞ்சிவிடுமா, இப்படிச் சிந்தனைக்குரிய கேள்விகளுக்கு இந்நூலில் சுவாரஸ்யமாகப் பதிலளித்திருக்கிறார் தமிழ் உத்தமுசிங் .இந்த புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு. எம் .சின்னத்துரை அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விஞ்ஞான ஆச்சரியங்கள் சுவையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலை அனைவரும் வாங்கிப் படித்து. பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- பதிப்பகத்தார்.