(குடும்ப நல ஆலோசகர்) வணிகவரித்துறையில் (சேல்ஸ்டேக்ஸ்) நேர்மையான உதவி
ஆணையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.தன்னம்பிக்கை, ஆனந்தயோகம்,
வேதாத்திரியம், பாசமலர் மற்றும் சமுதாய விழிப்புணர்வு சக்திசுடர் ஆகிய மாத
இதழ்களில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். சுய முன்னேற்றம்,
மகிழ்ச்சியான குடும்பம், எளிய பயிற்சி மற்றும் சிகிச்சை மூலம் நோய்களைக்
குணப்படுத்துதல் போன்ற 10 பல தலைப்புகளில் பல புத்தகங்கள்
வெளியிட்டுள்ளார்.மேடைப் பேச்சுப் பயிற்சி, இயற்கை உணவு தயாரித்தல் போன்ற
பல உபயோகமுள்ள பயிற்சிகளை நடத்தி வருகிறார். தன்னம்பிக்கை வாசகர் வட்டக்
கிளைகளைப் பல ஊர்களில் துவக்கி பொதுமக்களுக்கு சுயமுன்னேற்றப் பயிலரங்குகள்
நடத்தி வருகிறார். ஆன்மீகக் கூட்டங்களில் சிறப்புரை, பள்ளி - கல்லூரிகளில்
பயிற்சிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேச்சுகள் என சமுதாயப்
பணிபுரிகிறார். முத்திரைகள், அக்குபிரசர் பற்றிய ஒருநாள் பயிற்சி வகுப்பை
பல ஊர்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறார்.