முனைவர், நா, சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்
எஸ்.எஸ்.எம், கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக
பணியாற்றி வருகிறார். பேராசியர் பணியில் 7 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர்
பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நிகழ்ச்சிகளை
நடத்திவருகிறார். பல்வேறு இதழ்களிலும் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை
எழுதி வருகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை மகாகவி
பாரதியார், வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன்ஆகியோர் பயின்ற பெருமைமிகு
நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூயில் நிறைவு செய்தவர். அறிவியல் துறையில்
இளங்கலை பட்டம் முடித்து தமிழ்மீது கொண்ட மோகத்தால் முதுகலை மற்றும்
முனைவர் பட்டத்தை தமிழிலே முடித்தவர்.பட்டத்தை தமிழிலே முடித்தவர் கல்லூரி
காலங்களில் பொருநை எனும் மாணவ இதழை திறம்பட நடத்தி பலரின் பாராட்டுதல்களைப்
பெற்றவர். பேச்சு, கட்டுரை, கவிதை போன்ற துறை களில் சிறந்து விளங்கியவர்.
மாணவர் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வருபவர்,தற்போது
எஸ்.எஸ்.எம் சமுதாய வானொலியில் நாளொரு கதை, உன்னாலும் முடியும் என்ற
நிகழ்ச்சியில் பேசி வருகிறார். உலகை மாற்றிய கண்டு பிடிப்புகள், நினைவுகள்
என்ற நூல் களைத் தொடர்ந்து வெளிவரும் வெற்றிகள் விற்பனைக்கு அல்ல இவரது
மூன்றாவது நூலாகும்.