"இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள்" என்னும் இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் ஆழ்புலமை மிளிர்கின்றது. இலக்கிய ஆர்வலர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள் பயன்பாடு மிக்கதாக அமைவதுடன் பல நல்ல நூல்களைப் படித்த நிறைவையும் தருகிறது.