டாக்டர்
Y.R. மானக்சா அவர்கள் தன்னுடைய B.S.M.S., பட்டப் படிப்பு மற்றும் M.D.,
பட்ட மேற்படிப்பையும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில்
படித்தார்.
சென்னையில் புகழ் பெற்ற 'இம்ப்காப்ஸ்' மருத்துவமனையில் கௌரவ
மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். டாக்டர் சுசீந்திரன் வர்ம பிசியோதெரபி
கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.
குழந்தையின்மை - துறையில் பல மூலிகை ஆய்வுகள் செய்துள்ளார். அதன்மூலம்
பிறந்த மூலிகைக் குழந்தைகள் ஏராளம். குழந்தையின்மை சிகிச்சை அளிப்பதற்காக
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
தற்சமயம் தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறையில் உதவி மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.