இந்த நூல் பிள்ளைகளின் உளவியல் வளர்ச்சியை ஓர் ஒருங்கிணைந்த பார்வையில் அணுகுகிறது. இதில், பிள்ளைகளின் மன வளர்ச்சி, குடும்ப மற்றும் சமூகச் சூழல்களின் தாக்கம், உணர்ச்சி, சிந்தனைத் திறன்களின் உருவாக்கம், நவீனத் தொழில்நுட்பச் சூழலில் உருவாகும் புதிய சவால்கள் ஆகியவை விரிவாக ஆராயப்படுகின்றன.
மேலும், பிள்ளைகளில் சமூகப் பொறுப்புணர்வு, தலைமைத்திறனுடன் மதிப்பியல் அடிப்படைகள் எவ்வாறு வளர்க்கப்படலாம் என்பதையும் உளவியல், சமூகவியல் கோணங்களில் பகுப்பாய்வு செய்கிறது.