கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வானுடைய பெருமைகளை வெளிக்கொணர்வதற்கான மிகமிகச் சிறிய முயற்சியே இந்த நூல். இதிலுள்ள கட்டுரைகள், எடுத்துக்கொண்ட தலைப்புகளை முழுமையாக ஆராயவில்லை என்பதை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் கூடப் புரிந்து கொள்வார்கள். எவ்வளவு முயன்றாலும் கம்பனையும் வால்மீகியையும் முழுமையாக ஆராய்ந்து முடித்துவிட்டதாகச் சொல்ல முடியுமா? அதேபோன்று, கம்பனில் ஐந்தில் இரண்டு பங்கு இருக்கும் யுத்த காண்டக் கடலை முழுவதும் ஆய்வு செய்து இராமனைப் போர்க்கலை வல்லுனனாகக் காட்டுவதும் இயலாத செயலேயாகும்.