நட்சத்திரமாக வானில் உயர்ந்து நிற்கும் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் தொடங்கி ரஜினிகாந்தைக் கட்சி தொடங்கச் சொல்லிக் கிடுக்கிப்பிடி போட்ட பாஜகவின் நயவஞ்சகம் வரை தொட்டுச் செல்லும் இக்கட்டுரைகள் ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான அலசலை ஒரு மார்க்சியக் கண்ணோட்டத்தில் நிகழ்த்துகின்றன. இக்கட்டுரைகளில் மிளிரும் நகைச்சுவை உணர்வு வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளித்தபடி செல்கிறது
ஜனசக்தி மற்றும் தீக்கதிர் நாளிதழ்களில் அவர் 2015 மார்ச் முதல் 2020 டிசம்பர் வரை எழுதிய 41 கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒரு ஆறாண்டு கால இந்திய, தமிழ்நாட்டு அரசியல், பண்பாட்டு வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் இக்கட்டுரைகள் வாயிலாக நமக்குக் காட்சிப்படுகின்றன.