சிறுவர் இலக்கியம் படைப்பது ஓர் உயர்ந்த கலை. எழுதுகோல் வைத்திருப்பவர்கள் எல்லாம் இதைப் படைத்துவிட முடியாது சிறுவர் சிறுமியரோடு, மாணவர்களோடு ஒன்றிப்பழகி அவர்களுடைய உளப்பாங்கை உணர்ந்து படைப்பிலும் மனம் ஒன்றிச் செயல்படும்போது நல்ல கதைகள் கவிதைகள் நாடகங்கள் பிறக்கும். அயராத உழைப்பு வேண்டும், அன்பு நெஞ்சம் வேண்டும், உயர்ந்த இலட்சியம்வேண்டும். ஊர் நலனில் அக்கரை வேண்டும். ஏழைகளுக்கு இரங்க வேண்டும், சாதிமத பேதமில்லாமல் வாழ வேண்டும் பணமே வாழ்வென்று எண்ணாமல் நல்ல பண்புகளில் நாட்டம் வேண்டும். தீய குணத்தை வெறுக்க வேண்டும் தவிர தீய குணமுள்ள மனிதரை வெறுக்காமல் முயன்று அன்பு காட்டித் திருத்த வேண்டும். இவற்றைப் போன்ற சிறந்த படைப்புக்களை அவர் இளைஞர் உலகுக்குத் தொடர்ந்து வழங்க என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் இனய பாராட்டுக்களை வழங்குகிறேன்.