மனை ' என்னும் சொல்லுக்கு என்ன பொருள் ? அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.வீடு, இல்லம், மனைவி, இல்வாழ்க்கை,குடும்பம் வெற்றிடம் ,நற்றாய், இரண்டாயிரத்து நானூறு குழிகொண்ட நிலம், சிற்றில் நிலத்தின் அளவு வகை. சூதாடு பலகையின் அறை இவ்வாறு பல பொருள்களை அகராதியில் காண்கிறோம். அடுத்து அடி என்னும் சொல்லுக்கு அளவு, காலடி, காற்சுவடு,செய்யுள் உறுப்பில் ஒன்று ஆகியன பொருள். சாஸ்திரம் என்னும் சொல்லுக்கு, சாத்திரம் ,ஒழுங்கு, கட்டளை,கலை நூல், மறை -இப்படியாக பல பொருள்கள் உண்டு. ஆகவே ' மனையடி சாஸ்திரம் '' என்பது வீடு கட்டும் கலை '' என்று தெரிந்து கொள்கிறோம்.