இந்நூல் வௌவால்கள் குறித்த கற்பிதங்களைத் தகர்த்து அறிவியல் உண்மைகளைப் பேசுகிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் வௌவால்கள் பற்றிய குறிப்புகள் தொடங்கி, அவற்றின் உடலமைப்புகள், வகைகள், இனப்பெருக்கம் என அவற்றின் முழு வாழ்க்கைமுறையையும் சொல்லித்தருகிறது.
வௌவால்களைப் பற்றி வியப்பூட்டும் ஏராளமான செய்திகள் இந்த நூலில் உள்ளன. வெளவால்களுக்கு (vavoo paravai) பார்வை கிடையாது, எல்லா வெளவால்களும் மீயொலி அலை மூலமாகவே இரை தேடுகின்றன என்பது குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம்.