யா.பெரெல்மானுடைய இந்நூல் வானவியலின் சில பிரச்சனைகளையும் வானவியலின் சிறந்த விஞ்ஞானச் சாதனைகளையும், நட்சத்திர வானத்தின் மிக முக்கிய நிகழ்ச்சிகளையும் வாசகர்களுக்குக் கவர்ச்சிகரமாகத் தெரிவிக்கின்றது. நூலாசிரியர் அன்றாடம் பார்க்கும் சாதாரணச் சம்பவங்கள் பலவற்றை முற்றிலும் எதிர்பாராத புதிய கோணத்திலிருந்து காட்டி அவற்றின் எதார்த்தப் பொருளை விளக்குகின்றார்
அகிலாண்டத்தின் பரந்த படத்தை அங்கு நடக்கும் விந்தையான நிகழ்ச்சிகளைத் திறந்துகாட்டி விண்மீன் வானத்தைப் பற்றிய கவர்ச்சிமிக்க விஞ்ஞானத்தின் பேரில் வாசகர்களின் அக்கறையைத் தூண்டுவது நூலின் அடிப்படை நோக்கம்.