இவ்வுலகில் நான் ஒரு முறைதான் வாழப் போகிறேன். அதனை நான் வெறும் குமாஸ்தாவாகக் கழிக்க விரும்பவில்லை. நான் ஒரு எழுத்தாளனாக, நாடக ஆசிரியராக, நாவலாசிரியராக எனது வாழ்க்கையைக் கழிக்க விரும்புகிறேன் என்று கூறி, வேலையை உதறி எறிந்து விட்டு வெளியே வந்தார்.வகுப்பிற்குக் குறிப்புகள் இல்லாமல் வரமாட்டார். ஆனால் குறிப்புகளைப் பார்க்காமல் அனைத்தையும் எடுத்தியம்பும் ஆற்றல் பெற்றவர். எனது சான்றிதழில் ஆற்றல் மிக்க ஆசிரியர்; நாவன்மைமிக்க பேச்சாளர்; தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர் ; சிறந்த அமைப்பாளர் ; விளையாட்டில் சாம்பியன் என்று குறிப்பிட்டு ஊக்குவித்தவர். அவருக்கு இந்நூலைக் காணிக்கையாக்குவதில் பெருமையடைகிறேன். ஏன் முடியாது ? என்ற புத்தகத்தைப் படித்தோர் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டினர். பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி அதனைச் சுருக்கி உங்களால் ஏன் முடியாது?என்ற தலைப்பில் வெளிவருகிறது.