1) லெமுரியா - ஆராய்ச்சியாளர்கள் பலரை ஈர்த்த பெயர். தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியாக, உலக மக்கள் பலரும் ஏற்றுக்கொண்ட நிலப்பரப்பு. பூமிப்பந்தின் பல்வேறு இடங்களிலும் லெமுரியா மக்கள் இருந்ததாக அவரவர்கள் அடையாளம் காட்டினார்கள்.
2) ஆயினும், உண்மையில் லெமுரியா எங்கிருந்தது ? பண்டைய தமிழர்களின் குமரிக்கண்டத்திற்கும் லெமுரியாவிற்கும் என்ன தொடர்பு? இரண்டும் ஒன்றா?
3) தென் திசையே முன்னோர்களின் திசை என்றும், முன்னோர் வழிப்பாட்டைத் தென் திசை நோக்கியே செய்யவேண்டும் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை.
இத்தகைய நம்பிக்கைக்கு, குமரிமுனைக்குத் தெற்காக இருந்த குமரிக்கண்டமே காரணமா ஆதி மனிதர்கள் தோன்றி, வாழ்ந்து செழித்த பகுதியாகவும் மானுடத்தின் தொட்டிலாகவும் லெமுரியா என்னும் குமரிக்கண்டம் விளங்கியதா? உலக நாகரிகங்களின் ஆதிப் பிறப்பிடமாகவும் லெமுரியா திகழ்ந்ததா? விடை தேடும் பயணத்தில்... வியக்க வைக்கும் உண்மைகள் இதில் உள்ளது.