"முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாரதி பாடினான். ஆனால் இந்திய நாட்டில் இன்னும் அத்தகைய ஒருமைப்பாடு ஏற்படுவிட மதம், இனம், மொழி, கலாச்சாரம், தட்பவெப்ப வில்லை நிலை இவைகளால் வேறுபட்டு நிற்கும் நம் மக்கள் மனதில் ஆதிக்க வெறியும், தாங்களே உயர்ந்தவர்கள் என்ற போக்கும் இன்றும் இருப்பதைக் காண முடியும். அதனால் வேற்று மையில் ஒற்றுமை காண வேண்டியது அவசியமாகிறது. அதற்கு தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனையே கை கொடுக்கும்.