மக்களிடையே
எழும் சனி பகவானின் சஞ்சாரம் குறித்த அச்சத்தை என்னால் இயன்ற அளவு குறைக்க
வேண்டும். அவரவர் ராசிக்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் அர்த்தாஷ்டம
சனியாகவோ, ஏழரை சனியாகவோ, கண்ட சனியாகவோ, அஷ்டமத்து சனி என எதுவாக
இருந்தாலும் இந்த சனி பகவானின் சஞ்சார காலத்திலும் கடுமையாக உழைத்து
உயர்வினை அடைய இயலும். சாதனைகள் பலசெய்ய முடியும்.
நோயின்றி ஆரோக்கியமாக இருக்க இயலும். குடும்பத்திலும், அலுவலகத்திலும்,
உற்றார் உறவினருடன் சமுதாயத்திலும் இயல்பாக மகிழ்ச்சியுடன் இருக்க இயலும்
என்பதைத் தெளிவுபடுத்த கைரேகையுடன் ஒப்பீடு செய்து ஒரு நிரந்தர ஆய்வு
நூலினை எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலம் என்னுள் இருந்தது. அந்த
உயர்ந்த நோக்கில் எழுதப்பட்டதுதான் இந்த “சனிப் பெயர்ச்சியும் கைரேகை
விஞ்ஞானமும்” என்ற நூல்.