புது உறவில் அடியெடுத்து வைத்தவர்களுக்குப் பெரும்பாலும் மற்றவர்களிடம் இருந்து உதிரும் சொல்லே பிரச்சனைகளை எழுப்பும். இரு வித்தியாசமான பின்னணிகளைக் கொண்டவர்களை, தமிழில் இருந்த ஆர்வம் சந்திக்க வைத்தது மட்டுமில்லாமல் வாழ்க்கை பந்தத்தில் இணைக்கவும் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்கிறது. பணம், கௌரவம், மற்றவர்களின் முன்னே தனித்து இருப்பது போன்றவற்றை விடாது பின்பற்றும் தாய்க்கு மகள் பாரதி மிடிஸ்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த விக்ரமை திருமணம் செய்வது பிடிக்கவில்லை என்றாலும் மகளின் ஆசைக்காகச் சம்மதித்துத் திருமணத்திற்குப் பின்னாலும் தன் தலையீட்டை நுழைத்ததால் புதுமணத் தம்பதிகளுக்குள் சர்ச்சைகள் வெடிக்கிறது. ஐஏஎஸ் கனவுடன் இருக்கும் பாரதிக்கு கைடாக இருந்து அவளைத் தைரியமாகத் தேர்வை சந்திக்க வைத்த விக்ரம் தன் கோபத்தால் விட்ட வார்த்தைகள் பிரிவை நோக்கி இழுத்து வந்தாலும் இருவரும் கடைபிடித்த பொறுமை அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்திவிடுகிறது.