தமிழ் சிற்றிலக்கியங்களைப் பற்றி வந்த நூற்களில் பெரும்பாலானவை இலக்கிய வரலாற்று அல்லது வகைமை பற்றியவை. விதிவிலக்கு கோ. கேசவன், நாஞ்சில் நாடன், சிலம்பு நா. செல்வராசு இந்த வரிசையைச் சேர்ந்தவர். நூலின் தலைப்பு இருபதாம் நூற்றாண்டு சிற்றிலக்கியங்கள் என்றாலும், இனக்குழுச் சமூகக் காலந்தொட்டு இன்றுவரை பார்வையைச் செலுத்தியுள்ளார். பல்லவர், சோழர் அரசியல் பின்னணியில் உலாவையும் கலம்பகத்தையும் பார்க்கும் செல்வராசின் பார்வை முந்தைய மரபிலிருந்து வேறுபட்டது. முந்தைய காலகட்டங்களைவிட இருபதாம் நூற்றாண்டி சிற்றிலக்கியப் பெருக்கம் ஏன்? என்பதற்குரிய விடையைத் தேடுகிறது இந்நூல்.