‘நினைவலையில்...'
இது எனது முதல் படைப்பு. நம் எல்லோரின் வாழ்க்கையிலும் சில நினைவுகள்
நம்மோடு கூட தொடர்ந்து வரும். அப்படி ஒரு நினைவோடு பயணப்படும் கதை தான்
இது. கதையின் நாயகன் ஷிஜு பொன்குமாரின் வாழ்க்கையில், அவன் நினைவு
அடுக்கில் ஒரு விஷயம் மட்டும் அழுந்தப் பதிந்து உள்ளது. அந்த அவனது நினைவை
அவன் தேடி அலைகிறான். அதை அவன் அடைந்தானா? அது என்ன? கதையின் நாயகி ரிதன்யா
சூழ்நிலைக் கைதியாகி எவ்வாறு ஷிஜுவின் வாழ்வில் வருகிறாள். அவளது
நிலைப்பாடு என்ன... ஷிஜுவின் நினைவில் இவளைப் பற்றிய விஷயம் என்ன
இருக்கிறது. ரிதா ஏன் அவனை விட்டு விலகினாள்? இந்தக் கேள்விகளுக்கு விடை
இந்தக் கதைக்குள். படித்துத் தெரிந்து கொள்வோமா!..