இந்தியாவிலுள்ள சட்டங்களிலேயே மிகவும் சிறந்த சட்டம் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) ஆகும். இந்தியாவில் ஒரு வழக்கை நிரூபிக்க வேண்டுமானால் வாய்மொழிச் சாட்சியம் மற்றும் எழுத்து மூலமான சாட்சியத்தின் மூலம் தான் நிரூபிக்க வேண்டும்.சாட்சியம் வலுவானதாக இல்லையேல் அந்த வழக்குத் தோல்வியையே தழுவும். ஆவணங்கள் (Documents) என்பது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் இரண்டிலுமே தாக்கல் செய்யப்படுகின்றன ஆவணங்களை நீதிமன்றத்தில் குறியீடு (Mark) செய்யும் போது, வழக்குத்தரப்பினர்கள் (Parties) மற்றும் வழக்கறிஞர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். ஒரு தரப்பினருக்கு எதிரான ஆவணத்தை எதிர் தரப்பில் குறியீடு செய்வதை ஆட்சேபிக்காது இருந்துவிட்டு, பின்னர் அதனை ஆட்சேபிக்க முடியாது. இறுதிவரையில் அந்த ஆவணம் ஆட்சேபமற்றதாகவே கருதப்படும். வழக்குகளில் செராக்ஸ் நகல்களைச் சான்றாவணமாகக் குறியீடு செய்ய முடியாது. எதிர் தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கவில்லையானால் செராக்ஸ் நகலைக் குறியீடு செய்யலாம்