மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், புகார் மனுக்கள் எழுதுவதைப் பற்றியும், ஒவ்வொரு மனிதரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மனுக்கள் புகார் மனுக்கள் எழுதுவதற்கும், அதற்கென்று அந்தத் தொழிலை மேற்கொண்டிக்கிருக்கின்றவர்களை அணுகித்தான் மனுக்களையும் எழுத வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களுக்குள்ள பிரச்சனை உங்களுக்குத்தான் நன்றாக தெரியும். அந்தப் பிரச்சனை தொடர்பான மனுவை நீங்களே எழுதுவதுதான் நல்லது. உங்களது பிரச்சனை தொடர்பான மனுவை வாடிக்கையாக அந்தத் தொழிலை மேற்கொண்டிருக்கின்ற ஒருவரிடம் கூறி எழுதச் சொன்னால், அவர் உங்களது பிரச்சினையை அப்படியே எழுதாது, சிலவற்றை விட்டு விடுவார், அல்லது சில கற்பனைக் கதைகளை அதில் கலந்து விடுவார். அதனால் அது மனு தொடர்பான பரிகாரம் சிலவேளைகளில் உங்களுக்குக் கிடைக்காமல் கூட போய்விடலாம். எனவே இந்த நூலை எனது தமிழ் கூறு நல்லுலக மக்கள் அனைவரும் வாங்கிப் படித்திட இதன் மூலம் வேண்டிக் கொள்கிறேன்.