உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை ஏற்று, எதிர்தரப்பினர் கட்டளைகளை நிறைவேற்றினால் அதில் நிறைவேற்றுகை நடவடிக்கை தேவையற்றதாகும். சில வழக்குகளில் உச்சநீதிமன்றம் வரையில் வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் வாதிகளுக்கு சாதகமான நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், அப்போதும் சிலர் கட்டளையை நிறைவேற்ற முன்வருவதில்லை.
அதனாலேயே உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அந்தந்த நீதிமன்றங்களில் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்வது அவசியமாக இருக்கிறது.