இந்திய அரசியலமைப்புச் சட்டம் (Constitution of India) 26-11-1949-ஆம் நாள் ஏற்கப்பட்டு, 26-1-1950 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகின் மிகப்பெரிய அரசியலமைப்புச்சட்டமாகும். இது 22 பகுதிகளையும் 395 உறுபுகளையும் (மொத்தப்பிரிவுகள் 444) 12 அட்டவணைகளையும் கொண்டுள்ளன. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு அதன் தோற்றுவாய் (Preamble) ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தோற்றுவாய்படி மக்கள் தான் முடிவான அதிகாரநிலையில் உள்ளவர்கள். அதிலிருந்து தான் அரசியலமைப்பு எழுகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவின் ஆட்சி அதிகாரம், நீதி நிருவாகம் இன்னபிறவற்றைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்குகிறது