ஆழ்ந்து யோசிக்கலாமா; யோசிப்பதற்கே நேரம் இல்லை என்று காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுகிற காலம் தான், ஆனால் கேள்வி கேட்கவும், பிரச்சனைகள் வரும்போது அதைத் தீர்க்கவும்,ஆராய்வது ஆழ்ந்து யோசிப்பது அவசியமாக இருக்கிறது. ஆழ்ந்து சிந்திக்கும் திறனை வளர்க்க கற்றுத் தருகிறது இந்நூல்.
பேசப்பழகலாமா ; நாம் நினைப்பது ,நாம் பேசுவது, நாம் விரும்புவது எல்லாம் அடுத்தவர்களுக்குப் புரியவேண்டும் பிடிக்க வேண்டும், அவர்களைக் கவரவேண்டும், அப்போது தான் நாம் விரும்பியது நமக்கு நடக்கும். இந்நூல், தொடர்பு கொள்ளும் கலையை விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கிறது.
உணர்ச்சி வசப்படலாமா; கோபம் வெறுப்பு,அன்பு, பாசம், வீரம் போன்ற உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி? எதே வெளிப்படுத்த வேண்டும், எதை அடக்க வேண்டும் அதைத்தான் இந்நூல் சொல்லித் தருகிறது.
மாறுபட்டுச் சிந்திக்கலாமா; மாணவப்பருவத்தில் வித்தியாசமாக, நூதனமாக சிந்திக்கப் பழகிக் கொண்டால் அது வாழ்க்கை முழுவதும் நம் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உபயோகமாக இருக்கும்.எப்படி வித்தியாசமாகச் சிந்திப்பது' சொல்லித்தருகிறது இந்நூல்.
- பதிப்பகத்தார்.