தன்வந்த்ரி பகவான் சந்நிதி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இடம்பெற்றிருக்கும் இந்த தன்வந்திரிதான் பாற்கடலிலிருந்து அமுதம் கொண்டு வந்தவர். இவர் கொடுத்த அமுதத்தால்தான் அஸ்வினி தேவர்கள் அஸ்வினி நட்சத்திரர்களைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்தப் பணிக்கு மூலாதாரமாக விளங்கிய தன்வந்த்ரி, சங்கு – சக்கரதாரியாக அமிர்த கலசம் ஏந்தியபடி இங்கு சேவை சாதிக்கிறார். இவரை உளமார வழிபடலாம்.