சிறந்த கதைகள் ஒரு குழந்தையின் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதோடு, அதன் கற்பனைத் திறனையும் வளர்க்கிறது. கல்வி நிலைய முறையிலான அறிதல் ஒரு குழந்தைக்கு அறிமுகமாகும் முன்னதாக, அந்தக் குழந்தைக்கு வீடுதான் பள்ளிக்கூடம். பல காலங்களாக கதை சொல்வதின் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக் கதை சொல்லும் முறையானது யுகயுகமாக நீடித்து மற்றும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு அதன் ஆரம்ப பரிணாம கட்டத்தில், பார்க்கும் ஒவ்வொன்றும் அதிசயமாகவே தெரியும். பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் தான் செய்துப் பார்க்க விரும்பும். மனமும், அறிவும் வடிவம் பெறும் ஒரு பருவம் அது. இந்த இடத்தில்தான் கதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. உலகை எளிய மற்றும் சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்தலில் பயன்படும் ஒரு அற்புதக் கருவி கதை.