அரசியரறிவு மேலோங்கியுள்ள இன்றையச் சிந்தனையாளர்களையும் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒருவன் மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறான். அவன் தான் பிளேட்டோ. இனி வரும் சமூக முன்னேற்றத்திற்கும், இன்றுள்ள சமுதாய நாகரீகத்திற்கும் அநாகரிக காலத்திலே ஒருவன் கருவூலம் அமைத்துவிட்டுப் போனான். அவன் தான் சிந்தனையாளன் பிளேட்டோ.
பிளேட்டோ (Plato, (கிமு 427 – கிமு 347 ) பெரும்
செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார்.
இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த
கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர்
தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக்
கூடமாக ஏதென்ஸ் நகரில் கல்விக்கூடம் நிறுவினார். இவர் தனது
ஆதரவாளர் சாக்கிரட்டீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டில் உடன் இணைந்து
மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.