குகைகளில் மனிதர்கள் இருட்டில் வாழ்ந்தபோது மின்னலும் மின்மினிப் பூச்சிகளும் நொடி நேர வெளிச்ச விதைகளை விதைத்தன. காடுகளில் மரங்கள். கொடிகள், தீப்பற்றி எரிந்தபோது தீயின் தன்மையையும் அதன் கொடுமையையும் அதன் அருமையையும் மக்கள் அறிந்தனர். மழைக்காலங்களில் பனிக்காலங்களில் மனிதனைக் குளிரிலிருந்து தீ காப்பாற்றியது. எப்போது மெழுகு கண்டுபிடிக்கபட்டது? கொழுப்பு கண்டுபிடிக்கப்பட்ட போதே மெழுகும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது! சிலவகை கொழுப்புப் பொருள்களை குறிப்பிட்ட அளவு உஷ்ணப்படுத்தப்படும்போது மெழுகு உருவாகிறது.