
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v1.0.37

Opening the world of stories

Nallavargal Nanmai Adaivaargal
Free shipping over ₹500
வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய 'காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா அவர்கள் அவற்றை எளிய தமிழில் மெருகுபடுத்தி உருவாக்கம் செய்து தந்த நூல் அது.
190 கதைகளுடன் அதிக பக்கங்கள் கொண்ட அந்நூலை சிறுசிறு நூல்களாகக் கதைகளுக்கேற்ற விளக்கப்படங்களுடன் வெளியிட முன்வந்தோம். சில கதைகள் விரசம் கலந்ததாக இருந்தாலும் அவை நல்ல புத்திமதிகளை உள்ளடக்கியவையாக உள்ளன. தேவலோகக், கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், நகைச்சுவைக்கதைகள், அரச கதைகள், மாயாஜாலக் கதைகள், விலங்கு - பறவைக் கதைகள் என்று பல பிரிவுகள் உள்ளன. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற அனைத்துக் கதைகளும் பயனூட்டுபவை. அபலாசைகள். அவதூறுகள் நிறைந்த உலகில் அவற்றிலிருந்து மீண்டு நல்ல வாழ்வுத் தடங்களைத் கண்டுபிடிக்க வழிகாட்டும் கதைகள் பல உள்ளன.