book

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்

Kavignar Kannadasan Kavithaigal 3 Pagam

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184026221
குறிச்சொற்கள் :கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்
Add to Cart

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் காண முடியும்.
காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியால், பிரிவு, ஏக்கம், தூது என்ற கூறுகள் தொலைந்து போக, இயந்திர கதியாகிப் போன உலகில் பயம், நாணம், வெட்கம், துயர் என்பவையும் அமுங்கிப் போய்விட்டன. நிஜ வாழ்வில் இவை வழக்கொழிந்து போனதால் சமகாலத் திரைப்படங்களிலும் இவற்றைக் காண முடிவதில்லை.
அதிர்ஷ்டவசமாக கண்ணதாசனின் காலத்தில் இவை வழக்கில் இருந்தன. இல்லையென்றால் பல அருமையான, காதல் ரசம் சொட்டும் பாடல்களை நாம் இழந்திருப்போம்.