ஊருக்கு நல்லது சொல்வேன்!
Oorukku Nallathu Solven
₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :300
பதிப்பு :18
Published on :2017
ISBN :9788189780722
குறிச்சொற்கள் :பிரச்னைகள், தகவல்கள், சிந்தனை, தலைவர்கள், பழங்கதைகள், காவியம்
Out of StockAdd to Alert List
தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடையில் அலசும் இந்தக் கட்டுரைகள் சமுதாயத்துக்கு சத்து தரும் வைட்டமின் இலக்கியம். தாய்மை பற்றி எழுதும்போது இவரது பேனாவில் தாய்ப்பால் சுரக்கிறது, புரட்சி பற்றி எழுதும்போது கனல் தெறிக்கிறது. அகிம்சை பற்றி எழுதினால் கருணை நிறைகிறது. இப்படி வரிக்கு வரி அருவியாகுகிற இவரது தமிழ், படிக்கிற அத்தனை இதயங்களையும் இதமாக நனைத்து சிந்தனைகளில் குளிப்பாட்டுகிறது.
நேர்மையான அரசியல்வாதியாக, பேச்சாளராக, எழுத்தாளராக தமிழருவி மணியனை தமிழகம் நன்றாக அறியும். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிற வெளிச்ச வித்துக்கள். வள்ளலாரையும் பெரியாரையும் கலந்து செய்த தமிழருவி மணியனின் எழுத்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை, பாதுகாக்க வேண்டியவை.
விகடனில் தொடராக வெளி வந்தபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் இப்போது புத்தகமாக உங்கள் கைகளில்! கண்டிப்பாக இந்தப் புத்தகம் உங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை இன்னும் விசாலமாக்கும், உள்ளங்களில் ஒளியேற்றும்.