book

தென்றல் வீசி வரவேண்டும்

Thendral Veesi Varavendum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :6
Published on :2010
Out of Stock
Add to Alert List

"நீ எங்காவது போய்விடுகிறாயா வசு?" சற்று நேரம், வசுமதிக்குச் சொல்வது. செய்வது அறியாத நிலை. அவளால் எங்கே போக முடியும்? அவள் அறிந்த வரையில், அவளுடைய ஒரே போக் கிடம், இந்தப் பெரியம்மா வீடுதான். இதை விட்டு, எங்காவது போய்விடு என்று அந்தப் பெரியம்மாவே சொல்லும் நிலை ஆகிவிட்டதே. அதுவும், அவளாக ஒரு தப்புச் செய்யாதபோது. அவளிடம் குற்றம் கிடையாது என்று, பெரியம்மா வுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான், முகத்தை நேராகப் பாராமலே சொல்லியாகிறது. இன்று மட்டுமல்ல எப்போதுமே இப்படித்தான். நியாயமற்ற ஒன்றைச் செயல்படுத்தும்போது, பெரியம்மாவின் பார்வை வேறெங்கோதான் இருக்கும். ஆனால், பெரியம்மாவையும் குறை கூறுவதற்கில்லை.