முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்
Munetrathirukku Moondre Padigal
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :145
பதிப்பு :8
Published on :2010
குறிச்சொற்கள் :வெற்றி, முயற்சி, திட்டம், உழைப்பு
Out of StockAdd to Alert List
இராசிபுரத்திற்கு அருகிலுள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 24-12-1939-இல் பிறந்த இவர், இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதியதில் சென்னைப் பல்கலைக் கழக முதன்மையும் தங்கப்பதக்கமும் பெற்றவர்.
1972 - முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே வளரும் வேளாண்மை இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.
வீழ்ந்து கிடக்கிற மானிடத்திற்கு விழிகளை வழுங்குகிற எழுத்துக்களாக தனது வார்த்தை விரிப்புகள் விளங்க வேண்டும் என்பதில் மொத்த கவனமும் செலுத்தி அதற்காக உழைத்தவர்.
1989-ல் தனிமனித மேம்பாட்டிற்காக "தன்னம்பிக்கை" மாத இதழினைத் தொடங்கினார். கூடவே மாதந்தோறும் கோவையில் சுயமுனேற்ற பயிற்சி வகுப்புக்களைத் தொடர்ந்து நடத்தி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வந்தார்.
"இந்தச் சமுதாயத்தைத் திருத்துவதற்காகவே எழுதுகிறேன்' என்று தனது எழுத்திற்குத் தெளிவான நோக்கம் வைத்துக் கொண்டு எழுதியவர்.
-தன்னம்பிக்கை மாத இதழ்