book

ஸ்ரீ சத்ய சாயி பாபா

Sri Sathya Sai baba

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ வேணுகோபாலன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :494
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184762075
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், வழிப்பாடு, அற்புதங்கள், பொக்கிஷம், புராணம்
Out of Stock
Add to Alert List

ஆன்மிக வரலாற்றின் அற்புத அவதாரமாகத் தோன்றி, அருள்பாலித்து, பக்தகோடிகளைப் பரவசப்படுத்திக் கொண்டிருப்பவர், புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபா. 'சொல் வண்ணம் செயல்' என தொண்டு உள்ளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பகவானின் அருளாசியால், நாடுகடந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் தங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்பவர்கள் பலர். நோய்நொடி கண்டு பதறி ஓடிவந்து பாபாவின் பாதம் பணிபவர்கள், அவரது கருணைப் பார்வையால் நலம் பெற்று, நல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அன்றாடக் கவலைகளுக்கெல்லாம் மருந்து தேடி அலைந்தவர்கள், பாபாவின் அருள்வாக்கால் ஆத்ம ஞானம் பெற்று வருகிறார்கள். 'சாயி பாகவதம்', 'சாயி புராணம்', 'சாயி இலக்கியம்' என்றெல்லாம் பகவானின் லீலைகளை உலகம் முழுக்கப் பரப்பி வரும் பாபா பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. 'பகவான் ஓர் அவதார புருஷர்' என்பதை தங்கள் அனுபவங்களின் வாயிலாக உணர்ந்து ஏற்றுக்கொண்ட அவர்கள், பாபாவின் புகழைப் பாடினாலும் பாடக் கேட்டாலும் புண்ணியம் சேரும் என்று பக்தி கலந்த மகிழ்ச்சியில் ஊறித் திளைக்கிறார்கள். அந்தவகையில், பாபாவின் மகிமைகளையும், உலக மக்களுக்கு அவர் ஆற்றிவரும் தொண்டுகளையும், பக்தர்களுக்காக அவர் செய்துகாட்டும் அற்புதங்களையும்,அதனால் பக்தர்கள் அடையும் பலன்களையும் எளிமையான நடையில் உயிரோட்டமாக இந்த நூலில் படைத்திருக்கிறார் எழுத்துலக ஜாம்பவான் ஸ்ரீவேணுகோபாலன். அன்பு ஒன்றையே மனதிற்கொண்டு பாபாவின் திருவடி போற்றி எழுதப்பட்ட இந்த நூல், பாபாவின் பக்தர்களுக்கு அனைத்துப் பலன்களையும் கிடைக்கச் செய்யும் என்று நம்புகிறோம்.