book

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்

Nimmathiyana Vaalvu Pera Manthirangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலசூரியன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மந்திரங்கள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :மந்திரங்கள், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி
Add to Cart

'நான்' என்பது எது?

உடலா?  - ஒரு நாள் அழியப்  போவது!

உயிரா?  - உடற்கூட்டை விட்டு ஒரு நாள் போகப்போவது!

இந்த இரண்டும் சேர்ந்ததா?

நாம் எங்கிருந்து வந்தோம்?

எங்கே போகப்போகிறோம்?

இந்த உயிருக்கு வித்து தந்தை கொடுத்து.

இந்த உடலுக்கு உருவம் தாய் கொடுத்தது.

இந்த இரண்டையும் இணைத்து இயக்கும் சூத்திரதாரி யார்?

மரணத்திற்குப் பிறகு மனித நிலை என்ன?

இந்த கேள்விகளுக்கு இதுநாள் வரை அஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும் முடிவு கண்டதில்லை.

இதுதான் சூட்சும்ம்!  இதுதான் நித்தியம்! இதுதான் சத்தியம்!

நம்மை நாமே புரிந்து கொண்டால் அதுதான் வாழ்க்கை.  அதுதான் ஆனந்த நிலை.

அரிது அரிது - மானிடராய் பிறப்பதரிது.

இத்தகைய அரிய வாழ்வில் அலைக்கழிக்கும் பிணிக்கும்,மூப்புக்கும் இடையிலும் மன நிம்மதியுடன் வாழவே மனித குலம் விழைகிறது.

இந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல.  யுக யுகங்களாக நமது முன்னோகளும், மகான்களும் அருளிச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் நிம்மதி.

அத்தகைய நிம்மதியான வாழ்வுபெற சில வழிமுறைகளை விளக்குவதே இந்நூல்.

வழிபாட்டு முறைகளும், மந்தி வலிமை பெற்ற சுலோகங்களும் இதில் தெளிவுற கூறப்பட்டுள்ளன.