book

பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 3

Panja Thanthira Kathaigal Part 3

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. சம்பத்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

கல்வியிலும் செல்வத்திலும் குறைவற்றவர்கள் வாழ்ந்துவந்த பாடலிபுரம் என்னும் ஊரில் எல்லாவித நற்பண்புகளுடனும் கூடிய சுதரிசனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுடைய பிள்ளைகள் படிக்காத மூடர்களாக இருந்தார்கள். அதைக் கண்டு கவலைப்பட்டான் அரசன். ஒருநாள் சபையிலேயே சிந்திக்கத் தொடங்கினான்.

“கல்வியும் நல்ல பண்பும் இலலாத பிள்ளைகள் இருந்து ஆகக்கூடியது என்ன? பால் கொடுக்காத எருமைகளைக் காப்பாற்றி என்ன பயன்? வேத சாத்திரம் அறிந்தவனாக ஒரே ஒரு மகன் இருந்தாலும் அவனால் குடும்பம் முழுதும் சுகம் அடையும். இவ்வாறற்ற பிள்ளைகள் கர்ப்பத்தில் அழிந்தாலும் நல்லது, அன்றிப் பிறந்தவுடனே இறந்துவிட்டாலும் நல்லதே. குலத்தில் அயோக்கியனான பிள்ளை பிறக்கலாகாது. பல பிறவிகளில் செய்த புண்ணியத்தினால், இம்மையிலும் மறுமையிலும் சுகம் கொடுக்கும் மகன் பிறக்கிறான். பாவம் செய்திருந்தால், குலத்தைக் கெடுக்கும் மகன் பிறக்கிறான். இந்தப் பிள்ளையைப் பெற்றவர்களஎன்ன தவம் செய்தார்களோ என்று கண்டவர்கள் சொல்லும்படி நடப்பவன் அல்லவா பிள்ளை?” என்று தனக்குள் ஆலோசித்துவிட்டு, சபையை நோக்கிச் சொல்லல் ஆயினான்.

“இளமையும் செல்வமும் ராஜச குணமும் அறிவில்லாமையும் ஆகிய இந்த நான்கினுள் ஒவ்வொன்றும்கேட்டுக்குக் காரணமாகும். இந்த நான்குமே ஒருவனிடம் இருந்தால் அவன் என்ன பாடுபடமாட்டான்? கெட்டவழியில் நடக்கின்ற என் பிள்ளைகளுக்கு நீதி சாத்திர உபதேசத்தினால் எந்த மகாபுருஷன் மறுபிறவி எடுக்குமாறு செய்வான்?”

 அப்போது எல்லா நீதி சாத்திரங்களிலும் வல்லவனான சோம சர்மா என்பவன் எழுந்து, “இவர்களுக்குச் சமமான அறிவுடையவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்று சொல்லும்படி என்னால் ஆறுமாதத்தில் செய்யமுடியும். அதுவரை நீங்கள் பொறுத்திருந்தால் போதும்” என்றான்.

 அதைக் கேட்டு, நடுக்கடலில் திசைதப்பி மயங்கிய மாலுமி ஒருவனுக்குக் கரை கண்ணில் பட்டாற்போல அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சோம சர்மாவுக்கு உபசாரங்கள் செய்து தன் மகன்களை அவனிடம் ஒப்படைத்தான். உடனே அந்தப் பிள்ளைகளை சோம சர்மா தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி ஒரு கட்டியாகச் செய்ததுபோல நீதி சாத்திரங்களை எல்லாம் பஞ்சதந்திரக் கதை என்ற கருப்பங்கட்டியாக்கி, அரசகுமாரர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.