book

எதற்கு ஈழம்

Etharku ezham

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Deepaselvan
பதிப்பகம் :தோழமை வெளியீடு
Publisher :Thozhamai Veliyeedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :203
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது. நூலாசிரியர் இலங்கையில் இருந்து நிகழ்வுகளை கவனித்து எழுதி இருப்பதால், உண்மை நெருப்பாய் சுடுகிறது. தூய தமிழ் நடை சிறப்புக்குரியது. நன்றி: தினத்தந்தி 8/5/2013.