book

களஞ்சியம் (புதையல் 3 ம் பாகம்)

Kalangiyam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சின்னக்குத்தூசி
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2011
Add to Cart


சிறைச்சாலையில் உள்ள செல்லை விடவும் சின்னதான அறைக்குள் ஒரு வேள்வியைப் போல், ஞானியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார் அய்யா சின்னக்குத்தூசி, தமிழகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர்கள், பொதுநலச் சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், பலதுறை வல்லுநர்களிலிருந்து கடைநிலைத் தொழிலாளர்கள் வரை பலரும் தேடிவரக்கூடிய மாமனிதராக அவர் இருக்கிறபோதும் எளிமையும் லட்சிய உறுதியும் அய்யாவிடமிருந்து கொஞ்சமும் வழுவியதேயில்லை, தனக்கு என்னென்ன தெரியும் என அவர் ஒருபோதும் ஒருவரிடமும் பெருமையாகச் சொல்லிக்கொண்டதே இல்லை. ஆனாலும், அவரைத் தேடி வருபவர்கள் எதுபற்றிக் கேட்டாலும், கொஞ்சமும் சளைக்காமல் தனது மூளையில் பதிந்திருக்கும் தகவல்களை வாரி வழங்கும் ஆற்றல் கண்டு ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது. அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், இசை, திரைப்படம், விஞ்ஞானம், விளையாட்டு என எந்தத் துறை பற்றிய தகவல்களைக் கேட்டாலும் உடனடியாக வழங்குகின்ற நடமாடும் கணினி அவர், யாரோடும் ஒப்பிட முடியாத லட்சிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் அய்யா சின்னக்குத்தூசி.