book

கண்டதும் மொழிதல்

Kandathum Mozhithal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. ஞானதிரவியம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177355352
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, கற்றல், புதினம், வெற்றி
Out of Stock
Add to Alert List

படைப்பாளன் - வாசகன் இருவருக்குமான உறவை மிகவும் நெருக்கப்படுத்துவது படைப்பே. இப்போது புற்றீசல்கள்போல் உருவாகிவரும் எல்லாமும் படைப்பு என்ற நிலையை அடைந்து விடுவதில்லை. வாசகனிடம் தன்னை அவனுடைய மிகநெருக்கமானவொன்றாக எண்ணத்தூண்டுபவையே அதற்குத் தகுதியானவை. ஒரு படைப்பால் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம். புதிய சமூகத்தையே உருவாக்கிவிடும் வல்லமை படைப்புகளுக்கு மட்டுமே உண்டு. மார்க்சினுடைய மூலதனம் உலகையே மாற்றியமைக்க கூடிய ஒரு நவீனச் சத்தாந்தத்தை உருவாக்கிவிட்டமையை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

அறுபது- எண்பதுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான புதினமொன்று தமிழக அரசியலில் மாபெரும் சலசலப்பொன்றை உருவாக்கியிருந்தமையையும் நீங்கள் அறிவீர்கள். வாசரே ஒருவன் தான் எப்படி இருக்கிறானே அதுபோல்தான் உலகையும் எதிர்பார்க்கிறான். திருப்தி படாத நிலையில் அவன் முரண்படுகிறான். அது அவனுடைய சூழலுக்கேற்ப வெளிப்படுகிறது. அவை படைப்பாகும்போது படைப்பாளனின் எதிர்பார்ப்புகள் பகிரங்கமாகிறது. படைப்பாளன் தன் வாழ்வை அல்லது அனுபவத்தை வாசகனோடு பகிர்ந்து கொள்கிறான். அதிலொரு தன்னிறைவும் அடைகிறான்.